Posts

Showing posts from September, 2020

வேண்டும் விடுதலை!

Image
ஒரு தனியார் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றிய குடும்பத் தோழி ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். கடந்த ஒரு மாதமாக வேலையிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். காரணம் பள்ளி இயங்கியபோது இருந்ததைவிட தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடப்பதினால் அதிகப் பணியழுத்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார். எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்துவது, ஒருங்கிணைக்கும் வேலைகள் என குடும்பத்தைக் கவனிக்க முடியாத அளவு வேலைப்பளு.  ஆனால் நான் சொல்லவந்த விஷயம் இதுவல்ல. இவர் முன்பு ஒரு ஐ.டி. நிறுவனத்தில் உற்பத்தித் துறையில் பணியாற்றியவர். திருமணத்துக்குப் பின் கணவர் அரசு வங்கியில் பணியாற்றுவதால் அந்த வேலையை விட்டுவிட்டு பள்ளியில் தலைமையாசிரியையாகச் சேர்ந்தார். இப்போது பணியில் இல்லாமல் இருக்கும்போது அவ்வப்போதைய அன்றாடச் செலவுகளுக்குக் கணவரைச் சார்ந்திருக்கும் நிலை. இது தனக்கு என்னவோ போல இருப்பதாகவும், வீட்டில் தண்டமாய் இருக்கும் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சொன்னார். வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியுமா, அப்படியென்றால் திரும்பவும் ஐ.டி. சார்ந்த வேலை வாய்ப்பு கிடைக்குமா, ...