ஹொய்சாளம் பயணக்கட்டுரை - 1
ஹொய்சாளம் - பயணக்கட்டுரை 1 மதுரையிலிருந்து இரவு எட்டு மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. திருமணத்திற்குப் பிறகு நான்காண்டுகள் நண்பர்களுடன் பிரயாணம் சாத்தியப்படவில்லை. அதற்கு முன் வருடம்தோறும் பொங்கலையொட்டி எங்காவது சென்றுவிடுவோம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரயாணிக்கிறோம். மொத்தம் எங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்கள் ஹொய்சாளர் காலச் சிற்பங்களைப் பார்த்துவருவதாகத் திட்டம். மீதி இரண்டுநாட்கள் முதுமலை மற்றும் ஊட்டி. என் கல்லூரிக் காலத்து நண்பர்கள் கண்ணன் மற்றும் அமர்நாத்துடன் பிரயாணிக்கிறேன். கண்ணன் சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அமர்நாத் அரசலுவல். நானும் அமர்நாத்தும் மதுரையிலிருந்து கிளம்ப, கன்ணன் சென்னையிலிருந்து கிளம்பினான். இரயிலில் பிச்சைக்காரர்கள் பத்துநிமிடத்துக்கொருமுறை வந்தபடியே இருந்தனர். திருநங்கைகள் ஐந்தாறுமுறை வந்திருப்பார்கள். டாய்லெட் படுமோசம். சில டாய்லெட்டுகள் ஓவர்ஃப்ளோ ஆகி நாறடித்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். பெங்களூர் தாண்டி ஒரு ஸ்டேஷனில் இறங்கிப்பார்த்தேன். தோசையளவுக்கு இட்லி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச்சா...