Posts

Showing posts from April, 2020

ஹொய்சாளம் பயணக்கட்டுரை - 1

Image
ஹொய்சாளம் - பயணக்கட்டுரை 1 மதுரையிலிருந்து இரவு எட்டு மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. திருமணத்திற்குப் பிறகு நான்காண்டுகள் நண்பர்களுடன் பிரயாணம் சாத்தியப்படவில்லை. அதற்கு முன் வருடம்தோறும் பொங்கலையொட்டி எங்காவது சென்றுவிடுவோம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரயாணிக்கிறோம். மொத்தம் எங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்கள் ஹொய்சாளர் காலச் சிற்பங்களைப் பார்த்துவருவதாகத் திட்டம். மீதி இரண்டுநாட்கள் முதுமலை மற்றும் ஊட்டி. என் கல்லூரிக் காலத்து நண்பர்கள் கண்ணன் மற்றும் அமர்நாத்துடன் பிரயாணிக்கிறேன். கண்ணன் சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அமர்நாத் அரசலுவல். நானும் அமர்நாத்தும் மதுரையிலிருந்து கிளம்ப, கன்ணன் சென்னையிலிருந்து கிளம்பினான். இரயிலில் பிச்சைக்காரர்கள் பத்துநிமிடத்துக்கொருமுறை வந்தபடியே இருந்தனர். திருநங்கைகள் ஐந்தாறுமுறை வந்திருப்பார்கள். டாய்லெட் படுமோசம். சில டாய்லெட்டுகள் ஓவர்ஃப்ளோ ஆகி நாறடித்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். பெங்களூர் தாண்டி ஒரு ஸ்டேஷனில் இறங்கிப்பார்த்தேன். தோசையளவுக்கு இட்லி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச்சா...

லைக்கியல்

10/8/2016ல் எழுதியது. இதில் இன்னும் நிறைய எழுத ஆசையிருந்தது. எதற்கு வெட்டிவேலை, அந்தத் துறை சார்ந்த நபர்கள் செய்யட்டும், நமக்கு வேறு வேலையிருக்கிறது என்று விட்டுவிட்டேன். லைக்கியல்  ஆச்சரியமாக இருக்கிறது. உலக மக்கள்தொகை (710 கோடி). 2016-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 317 கோடியாம். இதில் 2016ல் மட்டும் 17.5 கோடிபேர் புதிதாய் கணக்கு தொடங்கியிருக்கிறார்கள். இத்தனைபேர் கூட்டமாகச் சேர்ந்து என்ன செய்கிறோம்? இதன் அவசியம் என்ன? உலகின் பாதி அன்றாடம் இதில் உலவிக்கொண்டிருக்கையில் இதுபற்றி பேசவேண்டியது அவசியமாகிறது. முன்னர் பெருங்கதையாடல்கள் இருந்தன. முன்னுதாரணத்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களைப் பற்றி எல்லாமே பேசப்பட்டுவிட்டன. சாமானியனின் அகம் தான் தான் என்று குதித்துக்கொண்டிருக்கிறது. இது சாமானியரின் காலம். இதுவே சொல்லப்படாத கதையாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இலக்கியங்கள் சாமானியனைப் பற்றிப் பேச ஆரம்பித்து பல காலமாயிற்று. ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒரு கதையிருக்கிறது. சொல்ல விசயமிருக்கிறது. தன் குரல் கேட்கப்படவேண்டுமென்று நினைக்கிறான்....

மொழிபெயர்ப்பு கவிதைகள்

அட்ரியன் மிசெலின் (1932-2008) கவிதைகள் குறித்து: இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இடதுசாரி. இடதுசாரிகளைப் போலவே, கவிதையைத் தொடங்குமுன் முதலில் மேடையில் ஏறிக்கொள்கிறார். பின்னர் பெருங்கூட்டத்தை நோக்கிப் பாட ஆரம்பிக்கிறார். வே.நி. சூர்யாவின் புதிய சிற்றிதழுக்காக மொழிபெயர்த்தது. இதழில் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகள்  எளிமையானவை. நேரடியானவை. தமிழகத்தில் இதுமாதிரி எழுத மனுஷ்யபுத்திரன் தொடங்கி நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள் ஒருநாள் சத்தியம் என்னை அடித்துக் கீழே தள்ளியது அந்த விபத்துக்குப் பிறகு நான் இப்படித்தான் நடக்கிறேன் எனவே என் கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள் உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள் கடிகாரத்தின் அலாரம் வலியில் அலறுகிறது என்னை நானே கண்டுணர முடியவில்லை; நான் திரும்பத் தூங்கப் போய்விட்டேன் எனவே என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள் கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள் உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள் கண்களை மூடும்போதெல்லாம் தீப்பிழம்புகளைக் காண்கிறேன் மார்பிளால் ஆன தொலைபேசிப் புத்தகம் செய்து எல்லாப் பெயர்களையும் அதில் செதுக...

என்ன தவம் செய்தனை

முகநூலில் என்ன தவம் செய்தனை என்ற தலைப்பில் தொடர்ந்து அவ்வப்போது பதிவுகள் இட்டுவந்தேன். இது என் பிள்ளைகள் சித்தார்த்தா, கவிதாயினியுடனான வாசம் மிக்க நினைவுகள். கவிதாயினி மத்தியானம் ஐஸ்க்ரீம் கடையைப் பார்த்துட்டு ஐஸ் வேணும்னு ஒரே அடம். டேய் வேணாம் உனக்கு சளிபிடிச்சிருக்குன்னா , நாந்தான் காலைல மருந்து குடிச்சேன்ல அப்படின்றா. சளி சரியாகட்டும் வாங்கித்தர்றேன்னேன். கொஞ்சநேரம் பேசாம இருந்தா. பிறகு , ' நான் இன்னொருக்க மருந்து குடிக்கட்டா ' அப்படிங்கா. சித்தார்த்தாவுக்கு ஒரு அசைன்மென்ட். நோட்டில் அவனுக்குத் தெரிந்த 4 இலைகளை ஒட்டி பெயர் எழுதவேண்டும். 1 ம் வகுப்பு. இலை பறித்து பெயரை ஒரு தாளில் எழுதித்தந்துவிட்டு போன் பேசிக்கொண்டிருந்தேன். இலையின் முன்புறம்போய் பசையை தடவிக்கொண்டிருந்தான் ஒவ்வொரு இலைக்கும். அடிக்கவில்லை , தட்டவில்லை. பிடரியில் தொட்டுத்தான் சொன்னேன். பின்பக்கமாய் தடவு அப்போதுதான் முன்புறம் இலை தெரியும்னு. சாயங்காலம் வரைக்கும் பேசலை. டீச்சர் 'good work' ன்னு நோட்டில் போட்டுருக்காங்க. அவங்கம்மா எனக்கு தாங்க்ஸ் சொல்லச்சொன்னா சொல்றான் , ' அப்பா எங்கிட்டே...